நாச்சியாள்
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கே பெண்களின் கல்யாணம் 'கடன்’ என்றால், மிடில் கிளாஸ் குடும்ப அம்மாக்களுக்கு..?! இதுபற்றி, தங்கள் பெண்களுக்கு 'நல்லபடியாக’ திருமணம் செய்து முடித்த, முடிக்கக் காத்திருக்கும் அம்மாக்கள் சிலர் இங்கே பேசு கிறார்கள்...
''எங்க பொண்ணுக்கு பொறுப்பான பெற்றோரா இருந்து, எங்க சக்திக்கு உட்பட்டு சீர், செனத்தி செஞ்சு கல்யாணம் முடிச்சோம்'' என்று பெருமிதத்துடன் சொல்லும் பிரபல 'சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம்,
'
''ஒரு நீதிபதி, அதுவும் ஒரு பெண், தன் மகள்களோட கல்யாணத்தை கடன்னு சொல்லியிருக்கறது துரதிர்ஷ்டம். அது கடன் இல்ல... கடமை!'' என்று சூடான வார்த்தைகளுடன் ஆரம்பித்த கடலூர் ஜெகதீஸ்வரி,
''என் ரெண்டு பொண்ணுங்களும் இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருக்காங்க. படிப்பால வர்ற கௌரவமே அவங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கும்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.
''பொண்ணுங்க கடன்னா, ஆம்பள பசங்க எல்லாம் சொத்தா? ஆண் பிள்ளையால வேதனையில அல்லாடுற அம்மா, அப்பாக்களும்... பொண்ணுங்களால நிம்மதியா தூங்குற அம்மா, அப்பாக்கள் கதையும் வீட்டுக்கு வீடு கொட்டிக் கிடக்கே!'' என்று பொங்கினார்.
பாண்டிச்சேரி யைச் சேர்ந்த ராமலட்சுமி, ''பொம்பள புள்ளைங்கள கடன்னு ஒரு நீதிபதி சொல்றது வேதனைதான். இன்னொரு பக்கம் பார்த்தா, அதுல உண்மையும் இருக்கத்தான் செய்யுது. ஒரு பொண்ண எவ்வளவு படிக்க வெச்சிருந்தாலும், அவங்க கை நிறைய சம்பாதிச்சாலும், பொண்ணுக்குக் கல்யாணம்னா பயமுறுத்துற முதல் விஷயம் வரதட்சணை. அந்த கொடுமையி னாலதானே 21-வது நூற்றாண்டிலயும் கேஸ் ஸ்டவ்வும், கெரசின் ஸ்டவ்வும் வெடிச்சுட்டு இருக்கு?'' என்று யதார்த்தத்தை எளிய வார்த்தைகளால் உடைத்தார்.
''கல்வி, பொருளாதர வளர்ச்சியும்கூட 'பெண் என்றால் பாரம்’ என்று புண்ணாகிப் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தின் கருத்தை இம்மி அளவும் மாற்றவில்லை. காரணம், பெண்ணை இன்னும் கவர்ச்சிப் பொருளாக, பாலியல் கருவியாக, வரதட்சணை வரவாகப் பார்க்கும் மனநிலையை மறக்கடிக்காமல் செய்கிறான் ஊடக அரக்கன்!
அந்த நீதிபதி குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது... இரண்டு விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்கிறேன். அதாவது, பாலினப் பிரச்னைகள் (Gender Issues) குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தக்கூடிய கல்வி, ஆரம்பப் பள்ளியிலிருந்தே வைக்கப்பட வேண்டும்... பெண்கள் அமைப்புகள் இன்னும் ஆழமான, விரைவான களப்பணியை முடிக்கி விடவேண்டும்'' என்று தெளிவான பாதை காட்டினார் சரஸ்வதி.
மாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தது, இந்த சாபங்களை மாற்றி எழுதிடத்தான்!
0 கருத்துரைகள்:
Post a Comment