புடவை என்ன நவீன அணுகுண்டா ?
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், அமெரிக்க ஏர் போர்ட் ஒன்றில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். தான் ஒரு தூதர் என்பதற்கான ஆவணங்களை அவர் காட்டியபிறகும்கூட பாது காப்பு அதிகாரிகள் விடவில்லை. 'நீங்கள் புடவை கட்டியிருப்பதால், கண்டிப்பாக சோதனையிட்டே தீருவோம்' என்று சொல்லி, சோதனையிட்டுள்ளனர்.- சமீபத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், புடவை கட்டும் பெண்கள் மத்தியிலும், அதனை நேசிக்கும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
''அமெரிக்கப் பெண்கள்கூட இந்தியா வந்தால், ஆசை ஆசையாக இந்திய கலாசார உடையான புடவையைக் கட்டும்போது, நம்முடன் நட்புக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இப்படி மோசமான செயலில் ஈடுபடலாமா?'' என்ற ஆதங்கத்தை கேள்வியாக்கி, புடவையை யும் அந்தக் கலாசாரத்தையும் சிநேகிக்கும் சிலரிடம் கேட்டோம்...
அருள்மொழி,வழக்கறிஞர்:

பேராசிரியை பர்வீன் சுல்தானா, பேச்சாளர்:

ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது, விமான நிலையத்தில் வெள்ளையர்கள் ஒரு வரிசையில் நின்றிருந்தனர். நான் அதில் நிற்க முனைந்தபோது, கறுப்பாக இருக்கிறேன் என்பதற்காகவே இன்னொரு வரிசையில் நிற்கச் செய்தனர். மிகவும் மனம் நொந்த சம்பவம் அது. நிறபேதம் அங்கு கொஞ்சமும் வற்றவில்லை என்பதுதான் உண்மை.
அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கு வந்தாலும், அவரின் பாதுகாப்புக்காக நம்மைத்தான் சோதனை செய்கிறார்கள். நாம் அவர்கள் நாட்டுக்குப் போனாலும் நம்மைத்தான் சோதனை செய்கிறார்கள். 'வல்லரசு, நல்லரசு’ போர்வையில் இருக்கும் அமெரிக்காவுக்கு, நம்முடைய எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தால்தான் இந்த அவமானங்கள் தொடராது!''
நித்யஸ்ரீ, கர்னாடக இசைப் பாடகி:

சாதாரண குடிமகளான எனக்கே இந்த சோதனைகள் தர்மசங்கடத்தைத் தந்தன. அப்படியிருக்க, தூதர் எனும் உயர் பதவியில் இருக்கும் மீரா சங்கருக்கு அதிகபட்ச அவமானத்தையே தந்திருக்கும். இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.''
பத்மினி சித்தார்த்தன், இல்லத்தரசி, சென்னை:

தினம் தினம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். அந்நாட்டின் மக்கள்தொகையில், குறிப்பிட்ட சதவிகிதம் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஏன் இந்தியர்களின் கலாசாரம், உடை பற்றிய ஒரு சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை? ஒருவேளை இந்தியா விடமிருந்து அப்படி ஒரு கோரிக்கையோ, கண்டனமோ கடுமையாக எழுந்தால் அது நடக்குமோ என்னவோ!''
நாச்சியாள்
படங்கள்: கே.ராஜசேகரன்,
து.மாரியப்பன்
படங்கள்: கே.ராஜசேகரன்,
து.மாரியப்பன்

0 கருத்துரைகள்:
Post a Comment