கவிதை


நான் உடைத்துக் கொண்டிருக்கிறேன்

என் நடையை
என் சிரிப்பை
என் ரசனையை
என் அழுகையை
நீயே தீர்மானிக்கிறாய்

நீ கட்டமைத்திருக்கும்
குடுவைக்குள்
என்னை கட்டாயப்படுத்தி
நுழைக்கிறாய்

வாழ்கிறேன்
மூச்சுத்திணறல் உடன்

திணறும் என் மூச்சை
உணருவதே இல்லை நீ

வார்த்தைகளால்
செய்கைகளால்
கெஞ்சல்களால்
புரிய வைக்க முயன்றேன்

என் மூச்சுத் திணறலை
உணருவதே இல்லை
அழுத்தம் பொறுக்காது
நானே என் கைகளால்
என் செயல்களால்
போராடிப் போராடி குடுவையை
உடைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்

திணறல் இல்லா சுதந்திர வெளியில் நிற்கும்
நீ என்னை
உனக்குத் தெரிந்த கடும் வார்த்தைகளை
என்னை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறாய்

நான் உடைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வார்த்தைகளையும்
நீ கட்டமைத்த குடுவையையும்

Photo: என் நடையை
என் சிரிப்பை
என் ரசனையை
என் அழுகையை
நீயே தீர்மானிக்கிறாய்

நீ கட்டமைத்திருக்கும்
குடுவைக்குள்
என்னை கட்டாயப்படுத்தி
நுழைக்கிறாய்

வாழ்கிறேன்
மூச்சுத்திணறல் உடன்

திணறும் என் மூச்சை
உணருவதே இல்லை நீ

வார்த்தைகளால்
செய்கைகளால்
கெஞ்சல்களால்
புரிய வைக்க முயன்றேன்

என் மூச்சுத் திணறலை
உணருவதே இல்லை
அழுத்தம்  பொறுக்காது
நானே என் கைகளால்
என் செயல்களால்
போராடிப் போராடி குடுவையை
உடைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்

திணறல்  இல்லா சுதந்திர வெளியில்  நிற்கும்
 நீ என்னை
உனக்குத் தெரிந்த கடும் வார்த்தைகளை
என்னை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறாய்

நான் உடைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வார்த்தைகளையும்
நீ கட்டமைத்த குடுவையையும்


இனி ஊருக்கு போக என்ன இருக்கு?


என்னடி மருமகளே
என்று வாஞ்சையுடன்
அழைக்கும் அத்தைகள் இல்லை

ஏய் குந்தாணி
என்று வம்பிழுக்கும்
மாமன்கள் இல்லை

பள்ளிகூடமா போற
பாத்து போம்மா என்கிற
அக்கறை தாத்தாக்கள் இல்லை

இன்னும் பத்து நாள்ல சமைஞ்ச்சிடுவா போல இருக்கு
என்று ஆருடம் சொல்லும்
பாட்டிகள் இல்லை

எங்க வீட்டு மாடு கன்னு போட்டிருக்கு
என்று கண் விரிய சொல்லும்
பாவாடை சட்டைகள் இல்லை

அத்தைகள் எல்லாம்
நோக்கியா கம்பெனிக்கு போயிட்டாங்க
மாமாக்கள் எல்லாம் பட்டணத்து
ஓட்டல்களுக்குப் போயிட்டாங்க
தாத்தா, பாட்டி போயே போயிட்டாங்க

தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கு
வீடெல்லாம் பூட்டியே கிடக்கு
இனி ஊருக்கு போக என்ன இருக்கு?

Photo: என்னடி மருமகளே
என்று வாஞ்சையுடன்
அழைக்கும் அத்தைகள் இல்லை

ஏய் குந்தாணி
என்று வம்பிழுக்கும்
மாமன்கள் இல்லை

பள்ளிகூடமா  போற
பாத்து போம்மா என்கிற
அக்கறை தாத்தாக்கள் இல்லை

இன்னும் பத்து நாள்ல சமைஞ்ச்சிடுவா போல இருக்கு
என்று ஆருடம் சொல்லும்
பாட்டிகள் இல்லை

எங்க வீட்டு மாடு கன்னு போட்டிருக்கு
என்று கண் விரிய சொல்லும்
பாவாடை சட்டைகள் இல்லை

அத்தைகள் எல்லாம்
நோக்கியா கம்பெனிக்கு போயிட்டாங்க
மாமாக்கள் எல்லாம் பட்டணத்து
ஓட்டல்களுக்குப் போயிட்டாங்க
தாத்தா, பாட்டி போயே போயிட்டாங்க

தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கு
வீடெல்லாம் பூட்டியே கிடக்கு
இனி ஊருக்கு போக என்ன இருக்கு?




என் இறுதி சடங்கில்
நீ பங்கு கொள்வாயா
என்று தெரியாது

என்னுடன் சுற்றித் திரிந்த
நினைவுகளை
என்னுடன் பேசித் திரிந்த
பொழுதுகளை
உன் பிள்ளைகளிடம்
சொல்லி மகிழ்வாயா
என்று தெரியாது

என்னுடன் பழகியதற்காகவும்
தோளோடு தோள் ஒன்றி
நடந்ததற்காகவும் பின்னாளில்
பெருமை கொள்வாயா
என்று தெரியாது

தாங்க முடியாத துயரின் போதேல்லாம்
என்னை நினைத்துக்கொள்வாயா
என்று தெரியாது


இருந்தாலும்
இந்த கணம் நீ என் தோழமை
நான் உன் தோழமை என்பது
மட்டுமே நிதர்சனமாய் விரிந்துகொண்டே......

Photo: என் இறுதி சடங்கில்
நீ பங்கு கொள்வாயா
என்று தெரியாது

என்னுடன் சுற்றித் திரிந்த
நினைவுகளை
என்னுடன் பேசித் திரிந்த
 பொழுதுகளை
உன் பிள்ளைகளிடம்
சொல்லி மகிழ்வாயா
என்று தெரியாது

என்னுடன் பழகியதற்காகவும்
தோளோடு தோள் ஒன்றி
நடந்ததற்காகவும் பின்னாளில்
பெருமை கொள்வாயா
என்று தெரியாது

தாங்க முடியாத துயரின் போதேல்லாம்
என்னை நினைத்துக்கொள்வாயா
என்று தெரியாது


இருந்தாலும்
இந்த கணம் நீ என் தோழமை
நான் உன் தோழமை என்பது
மட்டுமே நிதர்சனமாய் விரிந்துகொண்டே......


வார்த்தைகள் அற்ற சூனியத்தில் நான்!

என் வார்த்தைகளை நீ
சுமந்துகொண்டே
அலைந்துகொண்டு இருக்கிறாய்

உண்ணும் போதும்
என் வார்த்தைகளையும் சேர்த்தே
மெல்லுகிராய்

உறங்கும்போதும் என் வார்த்தைகளை
அணைத்துக் கொண்டே சிரிக்கிறாய்
பல இரவுகளில் அழுகிறாய்

என் வார்த்தைகள் சிலசமயங்களில்
மிகவும் குளிர்ச்சியாய் இருந்திருக்கலாம்
பல சமயங்களில்
கொடும் தணலாய் தகித்து இருக்கலாம்

சில வார்த்தைகள்
சொல்லிப் சொல்லிப் பழக்கப்பட்ட
வார்த்தைகள் என்பதலாயே
அதன் வீரியம் தெரியாமல்
உன்னிடம் புழங்கி இருக்கிறேன்

பல வார்த்தைகளை
என்னை நிருபிப்பதற்காகவே
உன்னை நோக்கி வீசியிருக்கிறேன்
என் அத்தனை பலத்தையும் பிரயோகித்து

காயம் செய்த வார்த்தைகளுக்காக
மண்டியிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க
எத்தனிக்கையில்
வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறாய்
என் வார்த்தைகளை சுமந்தபடி

வார்த்தைகள் அற்ற சூனியத்தில் நான்!

Photo: என் வார்த்தைகளை நீ
சுமந்துகொண்டே
அலைந்துகொண்டு இருக்கிறாய்
 
உண்ணும் போதும்
என் வார்த்தைகளையும் சேர்த்தே
மெல்லுகிராய்

உறங்கும்போதும் என் வார்த்தைகளை
அணைத்துக் கொண்டே சிரிக்கிறாய்
பல இரவுகளில் அழுகிறாய்

என் வார்த்தைகள் சிலசமயங்களில்
மிகவும் குளிர்ச்சியாய் இருந்திருக்கலாம்
பல சமயங்களில்
கொடும்  தணலாய் தகித்து இருக்கலாம்

சில வார்த்தைகள்
சொல்லிப் சொல்லிப் பழக்கப்பட்ட
வார்த்தைகள் என்பதலாயே
அதன் வீரியம் தெரியாமல்
உன்னிடம் புழங்கி இருக்கிறேன்

பல வார்த்தைகளை
என்னை நிருபிப்பதற்காகவே
உன்னை நோக்கி வீசியிருக்கிறேன்
என் அத்தனை பலத்தையும்  பிரயோகித்து

காயம் செய்த வார்த்தைகளுக்காக
மண்டியிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க
எத்தனிக்கையில்
வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறாய்
என் வார்த்தைகளை சுமந்தபடி

வார்த்தைகள் அற்ற சூனியத்தில் நான்!




இந்த கணம் நீ என் தோழமை


0 கருத்துரைகள்:

Post a Comment