இடுகையிட்டது
நிறமில்லா சிந்தனை on Tuesday, July 26, 2011
நேரம்
12:07 AM
மௌனத்தின் தேவதையாய்
நான் உலா வந்த நேரம்
என்னை வார்த்தைகளின்
ராணியாக்க முயன்றாய்
நான் மறுதலித்த போது
என் மௌனத்தை கடும்
உளிகொண்டு உடைத்தாய்
என் சொற்கள் உடைந்து சிதறி
உன் மனம் உடைத்த கணம்
நான் சாத்தானாகி இருந்தேன்
1 கருத்துரைகள்:
இயல்பாய் பூக்க வேண்டிய இதழ்களை உடைத்தால் இப்படித்தான்..
Post a Comment