சாத்தானாகி இருந்தேன்

on Tuesday, July 26, 2011
மௌனத்தின் தேவதையாய்
நான் உலா வந்த நேரம்
என்னை வார்த்தைகளின்
 ராணியாக்க முயன்றாய்
நான் மறுதலித்த போது
என் மௌனத்தை கடும்
உளிகொண்டு  உடைத்தாய்
என் சொற்கள் உடைந்து சிதறி
உன் மனம் உடைத்த கணம்
நான் சாத்தானாகி இருந்தேன்

1 கருத்துரைகள்:

ரிஷபன் said...

இயல்பாய் பூக்க வேண்டிய இதழ்களை உடைத்தால் இப்படித்தான்..

Post a Comment