பண்டிகை நாள் ஒன்றில்
காற்றின் வழியெங்கும்
மணக்கிறது
பலகாரங்களின் சுவை
திசை எட்டிலும்
ஈன சுரத்தில்
ஒலிக்கிறது
பெயரில்லாக் குழந்தைகளின் பசி
நாம் போட்ட சண்டைகள்
கடிதப் போக்குவரத்து
அறவே கிடையாது
தொலைபேசி நலவிசாரிப்புகள்
மருந்துக்கும் கிடையாது
உன் வீட்டில்
உன் மகனடித்து
மகள் அழுகையில்
உன் கண்முன் நிற்கும்
நம் வீட்டில்
நாம் போட்ட சண்டைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment