வெறுங்கை முழம்
சோம்பிக் கிடக்கிறது
பகல்
வெட்கி நீள்கிறது
இரவு
கையில் காசில்லா
நாட்களில்
என் பொழுதுகள்
என் இரவுகள்
பூரணத்துவம்
அடைவதில்லை
நம் உயிர்கள்
கலக்காதவரை
என் பகல்கள்
பூரணத்துவம்
அடைவதில்லை
இரவின் மிச்சம்
நீளாதவரை
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment