உங்கள் கல்வி உங்களை அறிவாளியாக்குகிறதா முட்டாள் ஆக்குகிறதா? என்ற ஒரு விவாதம் என் நட்பு வட்டாரங்களுடன் நடந்தது. நாங்கள் அனைவரும் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு கல்லூரி கல்வியைக் கற்றவர்கள். அண்ணாமலை பல்கலை கழகத்தில் வேளாண் அறிவியல் படித்தவர்கள்.
அப்போது பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமத்தில் தங்கி விவசாயிகளிடம் கற்றுக் கொள்ளவும் நாங்கள் கற்றதை அவர்களைடம் சொல்லவும் இரு வாரங்கள் அவர்களுடன் அவர்களாக மாறும் முயற்சிக்காக தங்கி இருப்போம்.அப்போதுதான் நாங்கள் கற்கும் ஏட்டுக் கல்விக்கும், நடைமுறை விவசாயத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளி புரிந்தது. நாங்கள் கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்யும் பல விஷயங்கள் விவசாயத்தை எந்த விதத்திலும் காக்கப் போவதுமில்லை, அந்த விவசாயிகளுக்கு உதவப் போவதுமில்லை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தோம். காரணம், அந்த சிலபஸ் 20 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது.இன்றைய நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப சிலபஸில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை துறையில் பணியாற்றும் அறிவு ஜீவிகள். இன்றும் அந்த சிலபஸில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தான் கல்வி பணி தொடர்கிறது. வேளாண் அறிவியலாளர்களும் அதைப் படித்து விட்டுத்தான் குப்பை கொட்டுகிறார்கள். அப்புறம் எப்படி விவசாயம் தழைத்தோங்கும்..?
இப்படித்தான் அநேகமாக எல்லா துறைகளும், தொழில்நுட்பக் கல்வியிலும், கலை அறிவியல் கல்லுரிகளிலும் இருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் இந்தக் கல்வி ந்ம்மை அறிவாளி ஆக்குகிறதா.. முட்டாளாக்குகிறதா..?
திறமையும் ஆர்வமும் இருக்கிற மாணவர் தேடிப் பிடித்து பல புத்தகங்களை உருட்டி அறிவை வளப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தான் கல்வித் துறை நம்மை வைத்திருக்கிறது.
அதைவிட இன்றைய பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் சுயசிந்தனையை வளர்க்காமல் சுயநலவாதிகளைத்த் தான் வளர்க்கிறது என்று சொல்லியிருப்பவர் அமர்த்தியா சென். அதை உண்மை என்று நிரூப்பிக்கின்றன நாம் தினம்தினம் எதிர் கொள்ளும் விஷயங்கள். எப்படி... அடுத்த பதிவில் பேசுவோமா?
அப்போது பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமத்தில் தங்கி விவசாயிகளிடம் கற்றுக் கொள்ளவும் நாங்கள் கற்றதை அவர்களைடம் சொல்லவும் இரு வாரங்கள் அவர்களுடன் அவர்களாக மாறும் முயற்சிக்காக தங்கி இருப்போம்.அப்போதுதான் நாங்கள் கற்கும் ஏட்டுக் கல்விக்கும், நடைமுறை விவசாயத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளி புரிந்தது. நாங்கள் கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்யும் பல விஷயங்கள் விவசாயத்தை எந்த விதத்திலும் காக்கப் போவதுமில்லை, அந்த விவசாயிகளுக்கு உதவப் போவதுமில்லை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தோம். காரணம், அந்த சிலபஸ் 20 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது.இன்றைய நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப சிலபஸில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை துறையில் பணியாற்றும் அறிவு ஜீவிகள். இன்றும் அந்த சிலபஸில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தான் கல்வி பணி தொடர்கிறது. வேளாண் அறிவியலாளர்களும் அதைப் படித்து விட்டுத்தான் குப்பை கொட்டுகிறார்கள். அப்புறம் எப்படி விவசாயம் தழைத்தோங்கும்..?
இப்படித்தான் அநேகமாக எல்லா துறைகளும், தொழில்நுட்பக் கல்வியிலும், கலை அறிவியல் கல்லுரிகளிலும் இருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் இந்தக் கல்வி ந்ம்மை அறிவாளி ஆக்குகிறதா.. முட்டாளாக்குகிறதா..?
திறமையும் ஆர்வமும் இருக்கிற மாணவர் தேடிப் பிடித்து பல புத்தகங்களை உருட்டி அறிவை வளப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தான் கல்வித் துறை நம்மை வைத்திருக்கிறது.
அதைவிட இன்றைய பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் சுயசிந்தனையை வளர்க்காமல் சுயநலவாதிகளைத்த் தான் வளர்க்கிறது என்று சொல்லியிருப்பவர் அமர்த்தியா சென். அதை உண்மை என்று நிரூப்பிக்கின்றன நாம் தினம்தினம் எதிர் கொள்ளும் விஷயங்கள். எப்படி... அடுத்த பதிவில் பேசுவோமா?
0 கருத்துரைகள்:
Post a Comment