|
![]() |
'பாஸ்போர்ட் டு எ ஹெல்தி ப்ரக்னென்சி’ என்ற ஆங்கில புத்தகத்தின் வெளியீடு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. ஒரு பெண், கர்ப்பம் தரிப்பது தொடங்கி, பிரசவத்துக்குப் பிறகு தாய் - சேய் பாதுகாப்பு மற்றும் மனநலம் வரையில் பேசுவதோடு, கணவருக்கும் பயனளிக்கக் கூடிய பல விஷயங்களை எழுதியிருக்கிறார் இந்த புத்தகத்தை உரு வாக்கியிருக்கும் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜுன்.
குழந்தை பிறப்பு பாதுகாப்பானதாக அமைவது பற்றி கற்றுத் தரும் நிபுணர்களில் ஒருவரான, அமெரிக்க தூதரகத்தைச் சார்ந்த பென்னி சிம்கின், இவ்விழா கெஸ்ட்களில் ஒருவர். அப்பாக்களுக்காக இவர் எழுதிய 'பர்த் பார்ட்னர் - ஃபார் டேட்ஸ்’ என்ற புத்தகம் வெகு பிரபலம்!
''மனைவியை தாயாக்குவதோடு என் கடமை முடிந்து விட்டது. பிரசவத்தின்போதும், அக்குழந்தையை வளர்ப்பதிலும் நான் என்ன செய்ய முடியும்... என்ற மன ஓட்டத்தை கணவன்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். 1969-ம் ஆண்டிலிருந்தே பிரசவ அறைக்குள் கணவரை அனுமதிக்கும் பழக்கம் அமெரிக்காவில் வந்ததன் விளைவாகத்தான் கத்தல், கூச்சல் கலாட்டாக்கள் குறைந்து சுகப் பிரசவங்கள் அதிகம் நிகழ்கின்றன" என்று குறிப்பிட்டார் பென்னி.
அவரைத் தொடர்ந்த கீதா அர்ஜுன், ''எங்கள் மருத்துவமனையில் 1981-லிருந்தே இதைச் செய்து வருகிறோம். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருகின்ற சூழ்நிலையில் இங்கேயும் இது அவசியம்" எனச் சொன்னபோது... அங்கு அமர்ந்திருந்த 'எதிர்கால அப்பா’க்கள் அதை ஒப்புக்கொள்ளும் முகபாவத்துடன்தான் இருந்தார்கள்!
- தென்றல்

''மனைவியை தாயாக்குவதோடு என் கடமை முடிந்து விட்டது. பிரசவத்தின்போதும், அக்குழந்தையை வளர்ப்பதிலும் நான் என்ன செய்ய முடியும்... என்ற மன ஓட்டத்தை கணவன்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். 1969-ம் ஆண்டிலிருந்தே பிரசவ அறைக்குள் கணவரை அனுமதிக்கும் பழக்கம் அமெரிக்காவில் வந்ததன் விளைவாகத்தான் கத்தல், கூச்சல் கலாட்டாக்கள் குறைந்து சுகப் பிரசவங்கள் அதிகம் நிகழ்கின்றன" என்று குறிப்பிட்டார் பென்னி.
அவரைத் தொடர்ந்த கீதா அர்ஜுன், ''எங்கள் மருத்துவமனையில் 1981-லிருந்தே இதைச் செய்து வருகிறோம். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருகின்ற சூழ்நிலையில் இங்கேயும் இது அவசியம்" எனச் சொன்னபோது... அங்கு அமர்ந்திருந்த 'எதிர்கால அப்பா’க்கள் அதை ஒப்புக்கொள்ளும் முகபாவத்துடன்தான் இருந்தார்கள்!
- தென்றல்
0 கருத்துரைகள்:
Post a Comment