கனவுகளை இழந்தபிறகு கண்கள் கூட எதற்கு?!

on Tuesday, May 8, 2012
என் கனவுகளை அம்மாவுக்காக விற்றேன்
கொஞ்சம் அப்பாவுக்காக இழந்தேன்
அண்ணனுக்காகவும் அக்காவுக்காகவும்
சமரசம் இன்றி கொஞ்சம் விற்றேன்
திருமணம் ஆனது
மாமியாருக்காக நிறைய கனவுகளை
நின்ற இடங்களில் எல்லாம்
தெரிந்தே இழந்தேன்
மாமனாருக்காகவும்
பல கனவுகளை எங்கோ தொலைத்தேன்
கணவர் கேட்டார் என அத்தனை கனவுகளையும்
மொத்தமாய் தொலைத்தேன்
கண்கள் சொல்லிவிட்டன
இனி கனவு காண்பதற்கு
எனக்கு உரிமை இல்லை என்று!
அட,
கனவுகளை இழந்தபிறகு கண்கள் கூட எதற்கு?!

0 கருத்துரைகள்:

Post a Comment