என் இறுதி சடங்கில்
நீ பங்கு கொள்வாயா
என்று தெரியாது
என்னுடன் சுற்றித் திரிந்த
நினைவுகளை
என்னுடன் பேசித் திரிந்த
பொழுதுகளை
உன் பிள்ளைகளிடம்
சொல்லி மகிழ்வாயா
என்று தெரியாது
என்னுடன் பழகியதற்காகவும்
தோளோடு தோள் ஒன்றி
நடந்ததற்காகவும் பின்னாளில்
பெருமை கொள்வாயா
என்று தெரியாது
தாங்க முடியாத துயரின் போதேல்லாம்
என்னை நினைத்துக்கொள்வாயா
என்று தெரியாது
இருந்தாலும்
இந்த கணம் நீ என் தோழமை
நான் உன் தோழமை என்பது
மட்டுமே நிதர்சனமாய் விரிந்துகொண்டே......
நீ பங்கு கொள்வாயா
என்று தெரியாது
என்னுடன் சுற்றித் திரிந்த
நினைவுகளை
என்னுடன் பேசித் திரிந்த
பொழுதுகளை
உன் பிள்ளைகளிடம்
சொல்லி மகிழ்வாயா
என்று தெரியாது
என்னுடன் பழகியதற்காகவும்
தோளோடு தோள் ஒன்றி
நடந்ததற்காகவும் பின்னாளில்
பெருமை கொள்வாயா
என்று தெரியாது
தாங்க முடியாத துயரின் போதேல்லாம்
என்னை நினைத்துக்கொள்வாயா
என்று தெரியாது
இருந்தாலும்
இந்த கணம் நீ என் தோழமை
நான் உன் தோழமை என்பது
மட்டுமே நிதர்சனமாய் விரிந்துகொண்டே......
0 கருத்துரைகள்:
Post a Comment